Friday, October 19, 2018

உண்மை தெய்வம் அறியும்!

உயிரை உருவி செல்லும் வலியின் உணர்வை
இவ்வுலகில் யாருக்கு புரியும் ?
உடைந்த இதயம் அழும் ஊமை மொழியை
இவ்வுலகில் யாருக்கு கேட்கும்?
உயிரை உருவி செல்லும் வலியின் உணர்வை
உண்மை தெய்வம் மட்டுமே அறியும்!
உடைந்த இதயம் அழும் ஊமை மொழியை
உண்மை அன்புக்கு மட்டுமே கேட்கும்!
குருட்டு உலகுக்கு எப்படி புரியும்?
கண்ணீரின் இந்த பயணம்!
தொலை தூரம் தெரியும் நம் தேசம்
பாதையின் இரு புறமும் மாயை
எதுவும் இங்கு மாறி போகும்
எந்த உறவும் அழிந்து சாகும்
துன்பங்கள் பல தாண்டி
தொடரும் இந்த பயணம்
இயேசுவின் அடி சுவட்டில்
ஒரு பரதேசி போல்!
 
(c) 2015 Arun Jebaraj

No comments:

Post a Comment