Friday, October 19, 2018

என்று மாறும் உன் இதயம்?

சுற்றி நிற்கும் மரங்களும் கேட்கும்
காலடியில் தோய்ந்த புற்களும் தவிக்கும்
சாய்ந்து பேசிய ஈச்ச மரங்களுடன் சேர்ந்து
என்று மாறும் உன் இதயம்? 

தவித்து நிற்கும் உயிர்களின் அழுகை
புரியாத மெளன வலியினில் சேர்ந்து
தரணி எங்கும் கேட்கும்
என்று மாறும் உன் இதயம்?

உயர செல்லும் மேகங்களும் கேட்கும்
பறந்து செல்லும் பறவைகள் கூட
மெல்ல வீசும் தென்றலுடன் சேர்ந்து
என்று மாறும் உன் இதயம்?

 (c) 2015 அருண்ஜெபராஜ்

No comments:

Post a Comment