பாவமில்லாத ஓர் உலகம் வேண்டும்
அதில் புதிதாய் நான் பிறக்க வேண்டும்
கபடமில்லாத உள்ளம் வேண்டும்
அதில் களிப்புடன் நான் வாழ வேண்டும்
காமம் இல்லாத அன்பு வேண்டும்
அதில் வெட்கம் நாணம் கலந்திருக்க வேண்டும்
அதில் புதிதாய் நான் பிறக்க வேண்டும்
கபடமில்லாத உள்ளம் வேண்டும்
அதில் களிப்புடன் நான் வாழ வேண்டும்
காமம் இல்லாத அன்பு வேண்டும்
அதில் வெட்கம் நாணம் கலந்திருக்க வேண்டும்
கற்புள்ள கன்னியாய் இருக்க வேண்டும்
அதில் கறைபடாமல் என்றும் வாழ வேண்டும்
காலை மாலை மாற வேண்டும்
அங்கு இளமையுடன் என்றும் நான் இருக்க வேண்டும்
முதுமையில்லாத ஒரு வாழ்க்கை வேண்டும்
அதில் முடிவில்லா நாட்களாய் வாழ வேண்டும்
சாவு இல்லாத வாழ்கை வேண்டும்
அதில் உன் மடியில் என்றும் வாழ்ந்திட வேண்டும்
நீதி நிறைந்த வானம் வேண்டும்
அதில் தென்றல் போல் இரக்கம் வீசவேண்டும்
யுத்தம் இல்லாத ஓர் குடும்பம் வேண்டும்
அதில் சிறு குழந்தையை போல் வாழ வேண்டும்
அன்பு நிறைந்த இதயம் வேண்டும்
அதில் சமாதானம் நதியாய் ஓட வேண்டும்
கண்ணீர் இல்லாத கண்கள் வேண்டும்
அந்த கண்ணில் உன்னை என்றும் காண வேண்டும்
பிரிவில்லாத ஓர் உறவு வேண்டும்
அதில் பிரிவின் சோகம் அறியாதிருக்க வேண்டும்
முடிவில்லாத ஓர் வாழ்க்கை வேண்டும்
அதில் என் உணர்வுகளை சொல்ல வேண்டும்
இந்த வாழ்க்கை வேண்டும் அதை உன்னிடம் கேட்கிறேன்
இதை நீ எனக்கு என்றென்றும் தர வேண்டும் - இறைவா!
©2014 Arun Jebaraj
அதில் கறைபடாமல் என்றும் வாழ வேண்டும்
காலை மாலை மாற வேண்டும்
அங்கு இளமையுடன் என்றும் நான் இருக்க வேண்டும்
முதுமையில்லாத ஒரு வாழ்க்கை வேண்டும்
அதில் முடிவில்லா நாட்களாய் வாழ வேண்டும்
சாவு இல்லாத வாழ்கை வேண்டும்
அதில் உன் மடியில் என்றும் வாழ்ந்திட வேண்டும்
நீதி நிறைந்த வானம் வேண்டும்
அதில் தென்றல் போல் இரக்கம் வீசவேண்டும்
யுத்தம் இல்லாத ஓர் குடும்பம் வேண்டும்
அதில் சிறு குழந்தையை போல் வாழ வேண்டும்
அன்பு நிறைந்த இதயம் வேண்டும்
அதில் சமாதானம் நதியாய் ஓட வேண்டும்
கண்ணீர் இல்லாத கண்கள் வேண்டும்
அந்த கண்ணில் உன்னை என்றும் காண வேண்டும்
பிரிவில்லாத ஓர் உறவு வேண்டும்
அதில் பிரிவின் சோகம் அறியாதிருக்க வேண்டும்
முடிவில்லாத ஓர் வாழ்க்கை வேண்டும்
அதில் என் உணர்வுகளை சொல்ல வேண்டும்
இந்த வாழ்க்கை வேண்டும் அதை உன்னிடம் கேட்கிறேன்
இதை நீ எனக்கு என்றென்றும் தர வேண்டும் - இறைவா!
©2014 Arun Jebaraj
No comments:
Post a Comment