Saturday, October 20, 2018

அப்பனே இயேசுவே! உன் செருப்பாகி என்றும் உன் காலடியில் வாழ்வேன்!

உதிரத்தை சிந்தி உயிர் கொடுத்ததும் நீயே!
இதயத்தில் நுழைந்து என் உயிர் மூச்சாய் வாழ்வதும் நீயே
அன்பு என்னும் சொல்லல் என் ஆணவத்தை அடக்கியதும் நீயே
கல்லான மனதை உன் மீது பித்தாகி வைத்ததும் நீயே
அலைபாய்ந்த மனதை உன் மீது நிலை குத்தி வைத்ததும் நீயே
குப்பையில் கிடந்த என்னை குனிந்து தூக்கி நிறுத்தியதும் நீயே 
ரத்தம் சிந்தி மீட்டதால் கண்மணி போல் காப்பதுவும்  நீயே
இன்று மட்டும் அல்ல என்றுயென்று  எல்லாம் நீயே
அப்பனே இயேசுவே! உன் செருப்பாகி என்றும் உன் காலடியில் வாழ்வேன்!
உன் பெயருக்கு களங்கம் ஒன்று என்றால், என் உயிர் துறந்து வீழ்வேன்!!

                              (c ) 2018 அருண் ஜெபராஜ்

No comments:

Post a Comment