ஒரு பெண்ணோடு தோன்றும் மோகம் அது வீரம் என்றான்- தமிழன்
செழிப்பான இப்பூலோக வாழ்கை அதுவே பாக்கியம் என்றான்
பேரோடும் புகழோடும் வாழ நிமிடம் தோறும் அவன் போடும் பகல் வேஷம்
பொய்யெல்லாம் மெய் என்றே வாழ்வு கொண்டான்!
கிடைக்காத வரம் ஒன்றை வேண்டி வேண்டியே களைத்து போனான்
திறக்காத கதவு ஒன்றை தட்டி தட்டியே மடிந்து போனான்
கையேடு சிக்காத மாயை ஒன்றை துரத்தி துரத்தியே
வாழ்வென்றால் அர்த்தம் எதுவென்று தெரியாமலே தொலைந்து போனான்!
வீழ்ந்த மனித மனம் ஒரு ஆழமற்ற பாதாள இருட்டறை
மெய் ஒளி எதுவென்று அறியாத வரை
எங்கெங்கோ வெளிச்சம் தேடி ஒளி அறியாமேலே
தீ என்று அறியாது வெளிச்சம் தேடி மடிந்திடும் விட்டில் பூச்சி போல் அழிந்தே போகும்!
2023 (c ) Arun Jebaraj
Thursday, December 7, 2023
வீழ்ந்த மனித மனம் ஒரு ஆழமற்ற பாதாள இருட்டறை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment