தந்தையின் அன்பின் கண்டிப்பிலும்
தாயின் அன்பின் கனிவிலும்
மேலான ஓர் அன்பினால் இதயம் குடி கொண்டாய்
நீங்காத கரையாய் நின்ற பாவத்தை
கன பொழுது குருதியால் கழுவியே சொந்தம் ஆனாய்
மழையில் நனைந்திடும் மழலை போல்
உள்ளம் எங்கும் ஆனந்தம் கொள்ள செய்தாய்
வலியின் ஊடாய் மாற்றம் கண்டு
சிறகடித்து பறக்கும் வண்ணத்து பூச்சி போல்
துன்பத்தின் ஊடாய் மாற்றம் கொண்டே
அழகிய உன் சாயலில் வனைந்து கொண்டாய்!
கண்ணீரில் கானல் நீராய் தெரியும் இவ்வுலகில்
பரதேசி போல் புரியாத புதிராய் கடந்து செல்ல பாதை வகுத்தாய்
இனி தாயின் மார்பில் துயிலும் சிறு குழந்தை போல்
உன் பிரசன்னத்தில் என்றுயென்றும் இளைப்பாறிடமே என் ஆன்மா!
©2023 Arun Jebaraj
No comments:
Post a Comment