தாயின்
ஈர கால் தடம் பின்பற்றி வரும்
சிறு
பிள்ளை போல்
உம்
அடி சுவட்டில் நடந்து வருகின்றேன்
பொல்லா
உலகில் எத்தனை பாதைகள்
மெய்
பாதை உம் சிலுவை பாதை
பேதை
நான் திசைக்கெட்டு போகாமல்
ஜீவ
கரை சேர்த்திடும்!
பாதையின்
இரு புறமும் நாசங்கள்
வழி விலகாமல்
காத்திடும்
எத்தனையோ
சாத்தானின் சதி மோசங்கள்
வஞ்சிக்கப்படாமல்
காத்திடும்
உபத்திரவத்தின்
பாதையே ஜீவ பாதை
என்பதை மனம் ஏற்க உதவிடும்!
காணும்
யாவும் இங்கு மாயையே
என்பதை
பேதை மனதிற்கு உணர்த்திடும்!
காணாத
நித்தியம் தேட
அழியாத
உம் சித்தம் என்றும் செய்ய
உம் அன்பால்
நிரப்பி வழி நடத்திடும்!
© 2018 அருண் ஜெபராஜ்
No comments:
Post a Comment