Thursday, June 1, 2017

பிறக்கும் முன் என் பெயர் உம் புத்தகம், பிறந்த பின் என் வாழ்க்கை ஓர் புத்தகம்!

பிறக்கும் முன் என் பெயர் உம் புத்தகம்
பிறந்த பின் என் வாழ்க்கை ஓர் புத்தகம்!
திரும்பி பார்க்கையில் என் நெஞ்சம் குதுகலக்கும்
மறுபடியும் பிறந்ததால் சிறு குழந்தை போல் இதயம் ஆகும்
என் தொப்புள் கொடி அறுக்கையில்
என் ஜீவனும் உம் பெயரில் ஒட்டிக்கொள்ளும்
என் கரம் பிடித்து நடக்க பழக்கையில்
உம் விரல்களும் அன்பு செய்யும்
நான் விழும் நேரம்
உம் கரமும் காயம் காணும்!
தகப்பன் போல் தோளில் சுமந்து செல்லும் போது
சிறு பிள்ளை போல் என் நெஞ்சம் குறுகுறுக்கும்!
இனி செல்லும் இடம் எங்கும்
உம் பிரசண்ணம் என்னை தொடரும்
நொடிக்கும் நொடிக்கும், இடையில் கூட பிரிவு காணும்
ஆனால் இனி இந்த உறவுவில் எப்படி இடைவெளி காணும்?
இதை நினைக்கையில் என் கண்களில் கண்ணீரே பொங்கும்!

                                                                          © 2017 Arun Jebaraj

No comments:

Post a Comment