முதலும் முடிவும் இல்லாத உயிரின் தோற்றமாய்
என் உள்ளே முதல் உயிர் துடிப்பாய் தோன்றி
என் இதயம் முழுவதும் வியாபித்து நின்றாய்!
விதையினை உடைத்து முளைத்திடும் ஒரு விருட்சம் போல்
உள்ளத்தினை உடைத்து நித்திய ஜீவனாய் என் உள்ளம் நிறைந்தாய்! நிலையில்லாத இந்த வாழ்க்கையைய் வலியினில் ஊடாய் எடுத்து சென்று
நித்தம் அழகான உன் சாயலில் மாறிடச்செய்தாய்!
அழுதிடும் தன் குழந்தையின் கண்ணீரைத்துடைத்திடும் தாயினை போல்
காயப்பட்ட கரத்தில் தாயினும் மேலான ஆறுதலை கண்டடைய செய்தாய்!
தினம் கண்மணி போல் காப்பதால் ஏனோ?
ஆன்மா முழுவதையும் கண்ணீரிலே சுத்தம் செய்தாய்!
வாழ்கை பாதையில் தீயையும் தண்ணீரையும் கடக்க செய்து
செழிப்பான இடத்தில் கொண்டு வந்து விட்டாய்!
இந்த மாய வாழ்கையில் நீ நடத்தும் விதம் கண்டு
இன்று உன் அன்பின் இரகசியம் உணர்ந்து வியக்கிறேன்!
©2023 Arun
Jebaraj